ஏசுவான் எண்ணற்ற குற்றமில்லாதோரை
பற்றற்ற பிற உயிர்களைக் கண்டால்
விசரென்று வீசுவான் கற்கலை
பூசுவான் கறியை எளியவர் முகம் கண்டால்
தூசென்று மதிப்பான் ஈசன் வனத்தை
பாசங்கோடு வாழ்ந்துப் பச்சரிசியும் நெல்லும்
பிறர்க்கில்லாது மோசம் செய்வான்
மனமெனும் சாட்சியை
மண்ணோடு மறைத்து மாயச் செய்வானேல்
சொல்கிறேன் அவனுக்குச்
சிவசக்தி யிருக்கிறாள் அவன் அழிவிற்கு!